சுஷாந்த் சிங்கை அவரது நாயின் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி…. உதவியாளர் அதிர்ச்சி தகவல்!

Published by
Rebekal

அவருடன் 24 மணிநேரமும் இருந்த எனக்கு தெரியும், அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை. அவரின் சொந்த நாய் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தான் கொலை செய்துள்ளார்கள் என சுஷாந்த் சிங்கின் உதவியாளர் அதிர்ச்சியான தகவலை கொடுத்துள்ளார்.

இன்று வரையிலும் மர்மம் தீராத கொலை வழக்குகளில் ஒன்றாக இருப்பது தான் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம். சமூக வலைத்தளங்களில் இது குறித்து சர்ச்சையான கருத்துக்களும் பதிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாலிவுட் நடிகராக இருந்தாலும் இந்தியாவிலுள்ள அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் சுஷாந்த் சிங். இவர் தற்கொலை செய்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியதும் முழு இந்திய திரையுலகுமே சோகத்தில் ஆழ்ந்தது. ஆனால், இது தற்கொலையா அல்லது கொலையா என இன்னும் கண்டறியப்படவில்லை.

இவரது மரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவரது காதலி ரே சக்கரபூர்த்தி மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் உதவியாளரான அன்கிட் ஆச்சார்யா தற்பொழுது சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவருடன் 24 மணிநேரமும் இருந்த தனக்கு அவர் எப்படி பட்டவர் என்பது நன்றாகவே தெரியும் என கூறிய அவர், சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், சுஷாந்த் சடல புகைப்படத்தை தான் அடிக்கடி பார்த்துக்கொண்ட இருப்பதாக கூறிய அவர், சுஷாந்த் வளர்த்த நாயின் பெல்ட்டினை வைத்து தான் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்கள் என கூறியுள்ளார். ஏனென்றால் தற்கொலை செய்துகொண்டவர்கள் கழுத்தில் “U” வடிவ அடையாளம் தான் இருக்கும் ஆனால், சுஷாந்தின் கழுத்தில் “O” வடிவ அடையாளம் உள்ளது எனவும் தெரிவித்த அவர், தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு கண்கள் மற்றும் நாக்கு வெளியில் வந்து இருப்பதுடன் வாயில் நுரை இருக்கும் ஆனால், அது கூட சுஷாந்தின் சடலத்தில் இல்லை என கூறியுள்ளார். இவர் தற்பொழுது கூறியுள்ள இந்த கருத்தால் சுஷாந்தின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

விஜய் எதிர்க்கட்சி தலைவரா? ஆதவ் அர்ஜுனா கருத்தும்.., திருமா ரியாக்சனும்…

விஜய் எதிர்க்கட்சி தலைவரா? ஆதவ் அர்ஜுனா கருத்தும்.., திருமா ரியாக்சனும்…

சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…

3 minutes ago

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

59 minutes ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

2 hours ago

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

2 hours ago

தென் மாவட்டங்களை சூழும் கருமேகம்… இன்று 6 மாவட்டங்களில் கனமழை!!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…

3 hours ago

தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…

3 hours ago