சுஷாந்த் சிங்கை அவரது நாயின் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி…. உதவியாளர் அதிர்ச்சி தகவல்!

Published by
Rebekal

அவருடன் 24 மணிநேரமும் இருந்த எனக்கு தெரியும், அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை. அவரின் சொந்த நாய் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தான் கொலை செய்துள்ளார்கள் என சுஷாந்த் சிங்கின் உதவியாளர் அதிர்ச்சியான தகவலை கொடுத்துள்ளார்.

இன்று வரையிலும் மர்மம் தீராத கொலை வழக்குகளில் ஒன்றாக இருப்பது தான் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம். சமூக வலைத்தளங்களில் இது குறித்து சர்ச்சையான கருத்துக்களும் பதிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாலிவுட் நடிகராக இருந்தாலும் இந்தியாவிலுள்ள அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் சுஷாந்த் சிங். இவர் தற்கொலை செய்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியதும் முழு இந்திய திரையுலகுமே சோகத்தில் ஆழ்ந்தது. ஆனால், இது தற்கொலையா அல்லது கொலையா என இன்னும் கண்டறியப்படவில்லை.

இவரது மரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவரது காதலி ரே சக்கரபூர்த்தி மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் உதவியாளரான அன்கிட் ஆச்சார்யா தற்பொழுது சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவருடன் 24 மணிநேரமும் இருந்த தனக்கு அவர் எப்படி பட்டவர் என்பது நன்றாகவே தெரியும் என கூறிய அவர், சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், சுஷாந்த் சடல புகைப்படத்தை தான் அடிக்கடி பார்த்துக்கொண்ட இருப்பதாக கூறிய அவர், சுஷாந்த் வளர்த்த நாயின் பெல்ட்டினை வைத்து தான் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்கள் என கூறியுள்ளார். ஏனென்றால் தற்கொலை செய்துகொண்டவர்கள் கழுத்தில் “U” வடிவ அடையாளம் தான் இருக்கும் ஆனால், சுஷாந்தின் கழுத்தில் “O” வடிவ அடையாளம் உள்ளது எனவும் தெரிவித்த அவர், தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு கண்கள் மற்றும் நாக்கு வெளியில் வந்து இருப்பதுடன் வாயில் நுரை இருக்கும் ஆனால், அது கூட சுஷாந்தின் சடலத்தில் இல்லை என கூறியுள்ளார். இவர் தற்பொழுது கூறியுள்ள இந்த கருத்தால் சுஷாந்தின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago