சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்.! சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக மேலாளர் ரேஷ்மாவிடம் விசாரணை.!

Published by
Ragi

மறைந்த சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக பிரபல மேலாளரான ரேஷ்மா ஷெட்டியிடம் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை மும்பை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், கடந்த ஜூன் 14 அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக சுஷாந்த் சிங் குறித்த செய்திகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் அவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பதை அறிய போலீசார் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது திறமை மேலாளரான ரேஷ்மா ஷெட்டியிடம், கடந்த வெள்ளிக்கிழமை காவல்நிலையத்தில் வைத்து சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை விசாரணை நடைப்பெற்றது. அவரது அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ரேஷ்மா ஷெட்டி பாலிவுட்டின் பல முன்னணி பிரபலங்களான அக்ஷய் குமார், கத்ரீனா கைப், ஆலியா பட் உள்ளிட்டோருக்கு மேலாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மும்பை காவல்துறையினர், சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், உறவினர்கள் உட்பட  35-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கைகளை பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது மறைவு குறித்து விசாரிக்க சிபிஐ-யிடம் வழக்கை கொடுக்குமாறு நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago