படப்பிடிப்பு தளத்திலேயே பலமுறை சுஷாந்த் சிங் ராஜ்புட் தன்னுடைய கேரவனுக்குள் போதை பொருளை உட்கொண்டதையும் தான் பார்த்ததாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தகவல்.
பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். தற்போது, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தைத் தொடர்ந்து எழுந்துள்ள போதை மருந்து வழக்கு சர்ச்சையில் சிக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரபோர்த்தியிடம் நடத்திய விசாரணையில் ஷ்ரத்தா கபூரின் பெயரும் வெளியானதால் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷ்ரத்தா கபூருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அந்த விசாரணையில் சுஷாந்த்தும் தானும் நடித்து வெற்றி பெற்ற படத்திற்காக கடந்த வருடம் சுஷாந்த் தனது வீட்டில், பலருக்கும் பார்ட்டி கொடுத்தார் என்றும் அங்கே மதுவகைகளுடன் போதை பொருளும் சப்ளை செய்யப்பட்டன என்றும் ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அவற்றையெல்லாம் நான் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ள அவர் படப்பிடிப்பு தளத்திலேயே பலமுறை சுஷாந்த் சிங் ராஜ்புட் தன்னுடைய கேரவனுக்குள் போதை பொருளை உட்கொண்டதையும் தான் பார்த்ததாக அந்த விசாரணையில் கூறியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…