சுஷாந்த் சிங் தற்கொலை.! 15 பேரிடம் விசாரணை நடைபெற்று முடிந்தது.!

Default Image

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பதற்காக கையெழுத்திட்ட ஒப்பந்த படிவத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிருவத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இது தொடர்பாக 15 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களின் கருத்துக்களையு பதிவு செய்துள்ளோம். என டி.சி.பி தெரிவித்தார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் சில தினங்களுக்கு முன்னர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் இந்திய சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை குறித்து டி.சி.பி அபிஷேக் திருமுகே கூறுகையில், ‘ நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அவர் நடிப்பதற்காக கையெழுத்திட்ட ஒப்பந்த படிவத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிருவத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இது தொடர்பாக 15 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களின் கருத்துக்களையு பதிவு செய்துள்ளோம். ஒப்பந்த படிவத்தின் உண்மை நிலையை அதிகாரிகள் விசாரித்து கூறுவார்கள்.’ என அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்