நடிகை ரியா சக்ரவர்த்தி போதை பொருட்களை நடிகை சாமுவேல் மிராண்டா, ஷோயிக் சக்ரவர்த்தி, திபேஷ் சாவந்த் மற்றும் பலரிடமிருந்து வாங்கி அதனை மறைந்த நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட்டிடம் கொடுத்துள்ளாராம்.
ஜூன் 14, 2020ஆம் தேதி MS.தோனி திரைப்படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் உயிரிழந்தார். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் ஒரு புயலே வீச தொடங்கியது.
நேபோட்டிசம் (பாகுபாடு பார்ப்பது), போதை பொருள் வழக்குகள் என பாலிவுட் சினிமாவே ஆட்டம் கண்டுவிட்டது. இதில் நேபோட்டிசம் உட்கட்சி பிரச்சனை. ஆனால், போதைப்பொருள் வழக்கு தற்போது வரை நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த போதைப்பொருள் வழக்கில் சுஷாந்த்சிங் ராஜ்புட்டின் பெண் தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து அவர் மீதும் வழக்கு பதியப்பட்டது. மேலும் அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி மீதும் வழக்குகள் பாய்ந்தன.
அதன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது கூடுதல் தகவல்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூலம் கிடைத்துள்ளது. அதாவது, நடிகை ரியா சக்ரவர்த்தி போதை பொருட்களை நடிகை சாமுவேல் மிராண்டா, ஷோயிக் சக்ரவர்த்தி, திபேஷ் சாவந்த் மற்றும் பலரிடமிருந்து வாங்கி அதனை மறைந்த நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட்டிடம் கொடுத்ததாக வழக்கில் முக்கிய குறிப்பாக பதியப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…