கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சூர்யா & ஜோதிகா..!!

சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கோரோனோவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நமக்கிருக்கும் ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. இதனால் பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி நடிகை ஜோதிகா இருவரும் தங்களது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். அதற்கான புகைப்படத்தை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#Vaccinated pic.twitter.com/3SJG9wYPFD
— Suriya Sivakumar (@Suriya_offl) June 22, 2021