14 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் சூர்யா-ஜோதிகா .!

Published by
Ragi

14 வருடங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ஹலீதா ஷமீம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2009-ல் வெளியான “பூவெல்லாம் கேடடுப்பார்” மூலம் காதலில் விழுந்த சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் இன்றும் ரசிகர்களின் பேவரட் தம்பதிகளில் ஒருவராக திகழ்ந்து வருகின்றனர் .  அதனையடுத்து உயிரிலே கலந்தது ,காக்க காக்க ,மாயாவி , பேரழகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த இவர்கள் கடைசியாக சில்லனு ஒரு காதல் படத்தில் 2006ல் நடித்தனர் .  அதனையடுத்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை நோக்கும் பொறுப்பை ஏற்றார் ஜோதிகா.

அதனையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு ’36 வயதினிலே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா , தொடர்ந்து பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு பல மெகா ஹிட் படங்களை ரசிகர்களுக்கு அளித்தார் . இந்த ஜோடியை மீண்டும் திரையில் ஒன்றாக காண ரசிகர்கள் இன்றும் ஆசைப்படுகின்றனர் . அதனை நிறைவேற்றும் வகையில் 14 வருடங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சூர்யா சமீபத்தில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார் .

அந்த படத்தை ஹலீதா ஷமீம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இவர் சில்லுக்கருப்பட்டி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யா-ஜோதிகா இணைந்து நடிக்கும் இந்த படத்தை மலையாள இயக்குநரான அஞ்சலி மேனன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

5 minutes ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

18 minutes ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

1 hour ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

2 hours ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

2 hours ago

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

11 hours ago