இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் 60 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் தப்பியுள்ளது மருத்துவர்களுக்கே ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்திலுள்ள கார்ன்வால் எனும் மாவட்டத்தை சேர்ந்த ரெபேக்கா கிராஃபோர்ட் எனும் பெண் ஒருவர் ஒரு குறுகிய பாதை கொண்ட மலையில் ஏறியதாக கூறப்படுகிறது. அப்பொழுது அவர் கால் திடீரென இடறியதால் அவர் 60 அடி உயரத்தில் இருந்து பாறைகள் மீது விழுந்துள்ளார். ஆனால் இந்த பெண்மணி அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ளார். அதன் பின்பு ஹெலிகாப்டர் மூலமாக காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த பெண் உயிர் பிழைத்து இருந்தாலும், அவரது முதுகில் 6 எலும்புகள் முறிவு அடைந்துள்ளதுடன், முகத்தில் தையல்களும் போடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த பெண் 60 அடி உயரத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ளது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், திடீரென தனது கால் இடறியதால் தான் கீழே விழுந்ததாகவும், பிடிப்பதற்கு கூட அருகில் எதுவும் இல்லாததால் விழ வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தான் விழுந்த பின்பு தனக்கு தலையில் பலத்த அடிபட்டதாகவும் இருப்பினும் நான் ஒரு பாறைமீது விழுந்த பின் எனக்கு என்ன நடந்தது என்பது எனக்கே தெரியவில்லை. ஆனால் தற்பொழுது நான் உயிரோடு இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…