சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணம்….!!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிகனாகும் ஆசையோடு 1975 ஆம் ஆண்டு சென்னை திரைப்பட கல்லூரியில் சேர்ந்தார். இவர் முதல் முதலில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் தான் நடித்தார்.
அதன்பின் ஒவ்வொரு படங்களாக நடித்து, மூன்று முடிச்சு என்ற படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக அறிமுகப்படுத்தியது. மேலும் 1981 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த தில்லுமுல்லு படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நகைசுவை நடிகராக வெளிப்படுத்தினார்.
இவர் தமிழில் மட்டுமல்லாது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல தடைகளை தாண்டி சாதனை படைத்து இன்று திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.