சூப்பர் கேஷ்பேக் ஆஃபர்…வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ரூ.255 எப்படி சம்பாதிக்கலாம்? என்பது இங்கே!

Published by
Edison

வாட்ஸ்அப் பே கேஷ்பேக் ஆஃபர் என்ற முறையில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ரூ.255 எப்படி சம்பாதிக்கலாம்? என்ற விவரங்களை கீழே காண்போம்.

வாட்ஸ்அப் பே பயனபடுத்தும் ஒவ்வொரு பயனருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.அதாவது,வாட்ஸ்அப் பே அம்சத்தின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 51 ரூபாய் கேஷ்பேக்காக கிடைக்கிறது. இந்த சலுகை பயனர்களை வாட்ஸ்அப் பே அம்சத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவில் உள்ள கூகுள் பே(Google Pay) மற்றும் போன்பே(PhonePe) போன்ற யுபிஐ(UPI ) எளிதாக்கும் பயன்பாடுகளுக்கு போட்டியாக நிறுவனத்திற்கு உதவும். வாட்ஸ்அப் பே ரூ.51 கேஷ்பேக் சலுகை மற்றும் அதை எப்படி ரிடீம் செய்வது என்பது பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

வாட்ஸ்அப் பே(WhatsApp Pay) என்பது பயன்படுத்த எளிதான சேவையாகும், இது வாட்ஸ்அப் பயனர்கள் செய்தியிடல்(chat) தளத்தில் பணத்தை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது. இந்தச் சேவையானது யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் அல்லது யுபிஐ அடிப்படையிலானது மற்றும் அனுப்புநரின் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து பெறுநரின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணத்தை மாற்றுகிறது.

தொற்றுநோய்க்கு மத்தியில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் தேவை மற்றும் டிஜிட்டல் முறையிலான கட்டண முறைகளின் பயன்பாடு மிகப்பெரியதாக உள்ளது.இந்த நிலையில்,வாட்ஸ்அப் பே பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் அதிகரிக்க விரும்புகிறது.

வாட்ஸ்அப் பே ரூ.51 கேஷ்பேக் சலுகைக்கு குறைந்தபட்ச பரிவர்த்தனை வரம்பு இல்லை:

அந்த வகையில்,வாட்ஸ்அப் புதிய சலுகையை கொண்டு வந்துள்ளது, இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் பே அம்சத்தைப் பயன்படுத்தி பயன்பாட்டில் அவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.51 கேஷ் பேக் பெறலாம். சலுகையின் போது, வாட்ஸ்அப் பயனருக்கு ஒவ்வொரு வெற்றிகரமான பரிவர்த்தனைக்கும் ரூ.51 கேஷ்பேக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, ஆஃபரை ரிடீம் செய்ய பயனருக்கு குறைந்தபட்ச கட்டணம் எதுவும் இல்லை. கேஷ்பேக்கை ரிடீம் செய்ய, ஒரு பயனர் செய்ய வேண்டியது வாட்ஸ்அப் பே அம்சத்தைப் பயன்படுத்தி, பதிவுசெய்யப்பட்ட மற்றொரு வாட்ஸ்அப் பே பயனருக்குப் பணத்தைப் பரிமாற்றுவதுதான்.இந்த ஆஃபர் தற்போதைக்கு ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.எனினும்,இந்த சலுகை படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும்.

வாட்ஸ்அப் பே ரூ.51 கேஷ்பேக் வரம்புகள்:

  • அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இருவரும் வாட்ஸ்அப் பே(WhatsApp Pay) இல் பதிவு(registered) செய்திருக்க வேண்டும்.
  • வாட்ஸ்அப் கணக்கு குறைந்தது 30 நாட்கள் பழமையானதாக இருக்க வேண்டும்.
  • வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கில் கேஷ்பேக் பெற முடியாது.
  • வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பில் இந்த சலுகை கிடைக்கும்
    சலுகையின் மூலம் அதிகபட்சமாக ஐந்து கேஷ்பேக் பெற முடியும் (மொத்தம் ரூ. 255)
  • ஐந்து வெவ்வேறு வாட்ஸ்அப் பே பயனர்களுக்கு பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

30 minutes ago

‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…

32 minutes ago

“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…

1 hour ago

பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…

2 hours ago

பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…

2 hours ago

பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…

2 hours ago