சிம்புவின் 48-வது படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாண் பிரியதர்ஷன் நடித்துள்ளார். அரசியலை மையமாக வைத்து இந்த திரைப்பட எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், தற்போது நடிகர் சிம்புவின் 48-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சிம்புவின் அடுத்த படத்தையும், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…