சூப்பர் ஸ்டாரின் இரண்டு வருட சபதம்! நெகிழ்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்த ரஜினிகாந்த்!

Published by
மணிகண்டன்
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
  • அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தன் ஆரம்பகால சினிமா பயணத்தையும் தனது அவமானத்தையும், அதன் பிறகு அதனை வென்றதையும் குறிப்பிட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், ‘ கே.பாலச்சந்தர் சார் ரஜினிகாந்த் எனும் பெயர் மீது நம்பிக்கை வைத்தார். அதனால் அந்த பெயரை தைரியமாக வைத்தார். பைரவி படத்தை கலைஞானம் தயாரித்து இருந்தார். அவரும் நம்பிக்கை வைத்து தயாரித்தார். அதே போல மற்ற தயாரிப்பாளர்களும் நம்பிக்கையோடு தயாரித்தார்கள்.’ என குறிப்பிட்டு, பின்னர், ‘ 16 வயதினிலே படத்தில் பரட்டை எனும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தேன். அந்த சமயம் ஒரு தயாரிப்பாளர் ஏவிஎம் ஸ்டூடியோவில் வைத்து குறிப்பிட்ட தொகைக்கு சம்பளம் பேசி விட்டு பின்னர் ஆயிரம் ரூபாய் கம்மியாக கொடுத்திருந்தார்.

அதனால் நான் சூட்டிங் போகாமல் மேக்கப் ஏதும் போடாமல் ஆயிரம் ரூபாய் தந்தால் மேக்கப் போட்டுக் கொள்கிறேன் என பிடிவாதமாக நின்று கொண்டிருந்தேன்.  உடனே எனக்கு அந்த படத்தில் கதாபாத்திரம் இல்லை எனக்கு ஒரு கூறிவிட்டார். அதனை தொடர்ந்து அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டேன் .16 வயதினிலே படம் வந்தது பரட்டை கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. அதன் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஏவிஎம் பட நிறுவனமே ஒரு முக்கிய படத்திற்காக என்னை அணுகி பெரிய தொகையை சம்பளமாக கொடுத்தனர். அதில் ஒரு விலை உயர்ந்த வெளிநாட்டு காரை வாங்கினேன். வெளிநாட்டு ஓட்டுநரை தேடினேன். கிடைக்கவில்லை உடனே ஆங்கிலோ இந்தியன் ஓட்டுநரை பணியமர்த்தினேன்.

அப்போது அந்த ஓட்டுநருக்கு புதிய சீருடை கொடுத்தேன். உடனே ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு வண்டியை விடுமாறு கூறினேன். அந்த தயாரிப்பாளர் என்னை எந்த இடத்தில் எனக்கு கதாபாத்திரம் இல்லை எனக் கூறினாரோ அதே இடத்திற்கு சென்று 555 சிகரெட் எடுத்து பற்றவைத்து அவர் முன்னால் நின்றேன். அங்கிருந்த எல்லோரும் எனது காரையும் அந்த காரின் ஓட்டுனரையும் பிரமிப்பாக பார்த்தனர். இவை அனைத்தையும் நான் இரண்டே வருடத்தில் செய்து முடித்தேன். அதற்கு காரணம் கடின உழைப்பும் ரசிகர்களின் அன்பும் என கூற அரங்கமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் கரகோஷம் எழும்பியது. அது அடங்க சில மணித்துளிகள் ஆனது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

27 minutes ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

1 hour ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

3 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

3 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

4 hours ago