கோடையில் வெளியாக காத்திருக்கும் சுந்தர் சி – யின் பட்டாம்பூச்சி!

Default Image

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாம் பூச்சி திரைப்படம் மே மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுந்தர் சி இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று பேரும் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக அம்ரிதா அய்யர், ஐஸ்வர்யா தாத்தா மற்றும் ரைசா வில்சன் ஆகிய 3 பேரும் நடித்து வருகின்றனர்.

சுந்தர் சி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பத்ரி நாராயணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் இந்த படத்துக்கு பட்டாம்பூச்சி என பெயரிடப்பட்டுள்ளதுடன் படம் வருகிற மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்