சீனா அமைதியை வளர்க்கத்தான் விரும்புகிறது. மேலும், எந்தவித அச்சுறுத்தலையும் இந்தியாவிற்கு சீனா தர விரும்பவில்லை. – சீன தூதர் சன் வீடோங்.
டெல்லியில் செயல்பட்டுவரும் சீன கல்வி நிறுவனமானது (Institute of Chinese Studies (ICS) Delhi), ஆனது இந்தியா-சீனா உறவுகள் குறித்து ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பேசிய இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங் இந்தியா சீன உறவு குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், ‘ இந்தியா-சீனா உறவுகளை முன்னோக்கி நகர்த்த பல முக்கிய விஷயங்களில் சீனா தன் கருத்துக்களை நேரடியாக கூற வேண்டும். சீனா அமைதியை வளர்க்கத்தான் விரும்புகிறது. மேலும், எந்தவித அச்சுறுத்தலையும் இந்தியாவிற்கு சீனா தர விரும்பவில்லை.’ என அவர் குறிப்பிட்டார்.
சீனாவும் இந்தியாவும் உலக தொழில் துறை மற்றும் விநியோக சங்கிலியில் பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கணக்கிடப்பட்ட உள்ளூர் புள்ளிவிவரத்தின்படி, 2018-19 ஆம் ஆண்டில் மட்டுமே 92 சதவீத இந்திய கணினிகள், 82 சதவீத தொலைக்காட்சி பெட்டிகள், 80 சதவீத ஆப்டிகல் ஃ பைபர் பாகங்கள், 85 சதவீத மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. மேலும், பல்வேறு பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஆதலால் இந்த வர்த்தக சங்கிலியை மாற்றுவது சற்று கடினம்.’ என அவர் கூறினார்.
‘இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக தேவையானது, நுகர்வோரின் இயல்பான தேர்வு ஆகும். இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரத்தை துண்டிப்பது இழப்பிற்கு வழிவகுக்கும்.’ என கூறினார் கால்வான் பள்ளத்தாக்கு மோதல் பற்றிய கேள்விகளுக்கு சீன தூதர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…