ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 3ம் தேதி அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் புரட்சி படையைச் சேர்ந்த முக்கிய தளபதிகளான சுலைமானி மற்றும் அபு மஹ்தாதி என்ற இரு தளபதிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்க்கு அமெரிக்கா நிச்சயம் பழிவாங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் சரியாக இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம், மற்றும் ஈராக்கின் பிலாட் என்ற விமான படை தளம் மீது இரு ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஏவுகன தாக்குதல் நடந்த இரு இடங்கள் ஈராக்கின் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலப்பகுதிகள் மற்றும் அமெரிக்க கூட்டு படைகள் தங்கியுள்ள முகாம்கள் என கூறப்படுகிறது. இந்த பதில் தாக்குதல் அப்பகுதியில் மேலும் பதட்டத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…