வரலாற்றில் இன்று(27.02.2020)… கற்பனை காவியம் சுஜாதா மறைந்த தினம் இன்று..

Published by
Venu

சுஜாதா என்று அழைக்கப்பட்ட ரங்கராஜன் மே மாதம்  3ஆம் தேதி, 1935ஆம் ஆண்டு பிறந்தார். இவர்,தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார்.இவரது இயற்பெயர்  ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்து தன்வசப்படுத்திய ஆற்றல்மிக்க கலைஞராவார்.

இவர் திருவரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, பின், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பொறியியல் படிப்பை  முடித்தார்.இதில்,  திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிய்யாற்றினார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. தமிழ் உரைநடை வரலாற்றில் பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரைப் போலவே சுஜாதாவின் உரைநடையும் ஒரு மைல்கல் என்றே குறிப்பிடலாம். இவர் இயற்றியவைகளான,

  • பிரிவோம் சந்திப்போம்,
  • அனிதாவின் காதல்கள்,
  • எப்போதும் பெண்,
  • என் இனிய இயந்திரா,
  • மீண்டும் ஜீனோ,
  • நிலா நிழல்,
  • ஆ,
  • கரையெல்லாம் செண்பகப்பூ,
  • யவனிகா,
  • கொலையுதிர் காலம்,
  • வசந்த் வசந்த்,
  • ஆயிரத்தில் இருவர்,
  • பிரியா,
  • நைலான் கயிறு,
  • ஒரு நடுப்பகல் மரணம்,
  • மூன்று நிமிஷம் கணேஷ்,
  • காயத்ரி,
  • கணேஷ் x வஸந்த்,
  • அப்ஸரா,
  • மறுபடியும் கணேஷ்,
  • வீபரீதக் கோட்பாடுகள்,
  • அனிதா இளம் மனைவி,
  • பாதிராஜ்யம்,
  • 24 ரூபாய் தீவு,
  • வசந்தகாலக் குற்றங்கள்,
  • வாய்மையே – சிலசமயம் – வெல்லும், கனவுத்தொழிற்சாலை,
    ரத்தம் ஒரே நிறம்,
  • மேகத்தைத் துரத்தினவன்,
  • நிர்வாண நகரம்,
  • வைரம்,
  • ஜன்னல் மலர்,
  • மேற்கே ஒரு குற்றம்,
  • உன்னைக் கண்ட நேரமெல்லாம்,
  • நில்லுங்கள் ராஜாவே,

இத்தகைய பல்வேறு படைப்புகளை அளித்த சுஜாதா பிப்ரவரி மாதம்  27ஆம் தேதி, 2008ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு மறைந்தார்.

Published by
Venu

Recent Posts

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

1 hour ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

1 hour ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

2 hours ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

2 hours ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

2 hours ago

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…

2 hours ago