தற்கொலை செய்வதற்கு இயந்திரமா..! அனுமதி அளித்த ஸ்விட்சர்லாந்து!

Published by
Rebekal

தற்கொலை செய்வதற்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயந்திரத்திற்கு ஸ்விட்சர்லாந்து அனுமதி அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கருணைக்கொலை ஆர்வலர் டாக்டர் பிலிப் நிட்சே அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். சார்கோ கேப்சூல் என அழைக்கப்படக் கூடிய இந்த தற்கொலை இயந்திரத்தின் 3டி பிரிண்ட்டிங் இயந்திரத்தை எக்சிட் இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த இயந்திரம் சவப்பெட்டி போன்ற மாடலில் இருக்கும். எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி செல்ல எளிதாக உள்ள இந்த தற்கொலை இயந்திரத்தில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் உள்ளே சென்று படுத்துக் கொள்ள வேண்டுமாம். அதன்பின் அந்த இயந்திரம் கேட்கக்கூடிய இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்து அந்த இயந்திரத்தில் இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும். அவ்வளவுதான் சில நொடிகளிலேயே வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

அதாவது இயந்திரத்தின் கேள்விகளுக்கு பதிலளித்த சில வினாடிகளிலேயே இயந்திரத்தின் உட்புறத்தில் இருந்து நைட்ரஜன் வெளியாகும். அதன்பின் ஆக்சிஜனின் அளவு 20 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைந்து விடும். இதனால் உள்ளே இருப்பவர்கள் உடனடியாக சுயநினைவை இழந்து கோமாவுக்கு சென்று விடுவார்களாம். இவை அனைத்தும் வெறும் 30 விநாடிகளில் நடக்கும்.

அடுத்த 5 நிமிடத்தில் சுயநினைவை இழந்த நபர் உயிரிழந்து விடுவார் என கூறப்படுகிறது. இந்த இயந்திரத்திற்கு தற்பொழுது சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு காரணம் கடந்த 2020ஆம் ஆண்டு 1,300 பேர் தற்கொலை செய்து கொண்டது தான் என கூறப்படுகிறது. எனவே அடுத்த ஆண்டு முதல் இந்த இயந்திரம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என கூற வேண்டிய இடத்தில் தற்கொலை செய்துகொள்வதற்கான இயந்திரத்திற்கு அனுமதியை சுவிட்சர்லாந்து அரசு வழங்கியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

10 minutes ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

31 minutes ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

44 minutes ago

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

1 hour ago

“தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?” சீமானுக்கு கொலை மிரட்டல்!

சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…

2 hours ago

நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…

2 hours ago