Suicide attack at Pakistan [Image source : AP Photo]
2021இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது பிரச்சனைகள், தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் அளவுக்கு தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என ஒரு பாகிஸ்தான் அமைப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் குறித்து முடிவு எடுக்க இந்தியாவுக்கு உரிமை இல்லை.! பாகிஸ்தான் கடும் அதிருப்தி.!
பாகிஸ்தான் – ஆப்கன் எல்லையான கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் ஒரு பள்ளி கட்டிடத்தில் தற்காலிக ராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த முகாமில் இன்று அதிகாலை ஒரு பயங்கரவாத கும்பல் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அந்த 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
இந்த தற்கொலை படை தாக்குதலில் 23 பேர் உயிரிழந்ததாகவும் 27 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், உயிரிழப்புக்கள் மேலும் கூடும் என கூறப்படுகிறது. இருந்தும் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
உயிரிழந்தவர்களின் பலர் ராணுவ உடையில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர்கள் அனைவரும் இராணுவ வீரர்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தெஹ்ரீக்-இ-ஜிஹாத் பாகிஸ்தான் — பாகிஸ்தான் தலிபானுடன் இணைந்த ஒரு புதிய குழுவானது இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…