காபூல் கல்வி நிறுவனத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என்று காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடக நிறுவனமான டோலோ நியூஸ் தனது ட்விட்டரில், காஜ் கல்வி மையத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர். மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்காக மையத்திற்கு வந்ததாக காபூல் பாதுகாப்புக் கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் கல்வி நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை காபூல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…