7 செயற்கை கோள்களை எலக்ட்ரான் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக ராக்கெட் லேப் நிறுவனம் அறிவித்துள்ளது.
ராக்கெட் லேப் என்பது அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் விண்வெளி நிறுவனமாகும். இந்த நிறுவனம் ராக்கெட் போன்ற விண்வெளி சாதனங்களை தயாரித்தும், ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் பணியையும் செய்து வருகிறது. எனவே தனது வாடிக்கையாளர்களின் செயற்கை கோள்களை எலக்ட்ரான் என பெயரிடப்பட்டுள்ள இலகு ரக ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி வருகின்றனர்.
கடந்த 2017-ல் தொடங்கிய இந்த முயற்சியின் முடிவாக இதுவரை 11 எலக்ட்ரான் ராக்கெட் செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் அனுப்பி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் 7 செய்ற்கை கோள்களுடன் கூடிய எலக்ட்ரான் ராக்கெட் ஒன்று நியூசிலாந்தின் மாகியா தீபக்கற்கத்திலிருந்து புறப்பட தயாராக இருந்த நிலையில், திடீரென ராக்கெட் செயலிழந்து செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ராக்கெட் லேப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, இந்த சம்பவத்திற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும், விரைவில் 7 செய்ற்கை கோள்களும் எலக்ட்ரான் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளனர்.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…