பெண் குழந்தை கல்விக்காக போராடி, நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய இளம் பெண் தான் மலாலா யூசுப். இவர் மீது தலிபான் பயங்கரவாதிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலில் இவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் உலக அளவில் பேசப்பட்டதையடுத்து மலாலா பலராலும் புகழப்பட்டார்.
மேலும் இவர் தனது 16 வது வயதிலேயே பாலின சமத்துவ அவசியம் குறித்து ஐநாவில் உரையாற்றிய நிலையில், இவர் பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அசர் என்பவருடன் மலாலாவுக்கு நேற்று எளிய முறையில் இங்கிலாந்தில் வைத்து திருமணம் நடந்ததாக தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மலாலாவும் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் என் வாழ்வில் இது ஒரு பொன்னான நாள். நானும் அசரும் வாழ்க்கை துணையாக இருக்க முடிவு செய்துள்ளோம். எனவே என் குடும்பத்துடன் சிறிய நிக்கா விழாவை கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்கு அனுப்புங்கள் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…