அடுத்தடுத்து துப்பாக்கிசூடு: சிறிது பூட்டுதலுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பென்டகன்!

Published by
பாலா கலியமூர்த்தி

பென்டகன் மெட்ரோ நிலையம் அருகே பல துப்பாக்கிச் சூடுகள் காரணமாக பூட்டுதலுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு.

அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன், தலைநகர் வாஷிங்டனின் அர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ளது. உலகின் அதி நவீன ராணுவத்தின் தலைமையிடமான பென்டகனில் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டியிருக்கும். இந்த சூழலில், கடந்த செவ்வாக்கிழமை பென்டகன் அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் (டிரான்ஸிட் சென்டர்) துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.

ரயில் நிலையத்தில் அடுத்தத்தடுத்து சில முறை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சிலர் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பென்டகனை சுற்றியுள்ள பகுதியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பென்டகன் ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி, பொதுமக்கள் அந்த பகுதிக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் Pentagon’s security force ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பென்டகன், அருகிலுள்ள மெட்ரோ நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சிறிது நேரம் பூட்டப்பட்டதை தொடர்ந்து, கட்டிடத்தின் பாதுகாப்பை மேற்பார்வையிடும் பென்டகன் படை பாதுகாப்பு முகமை (PFPA), தற்போது பூட்டுதல் நீக்கப்பட்டு கட்டிடம் மீண்டும் திறக்கப்பட்டது என்று அறிவித்துள்ளது.

ஆனால், நடைபாதை 2 மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் நுழைவு மூடப்பட்டுள்ளது.  நடைபாதை 3 நடைபாதை போக்குவரத்துக்கு திறந்திருக்கும் என்றும் பென்டகன் பாதுகாப்பு படை நிறுவனம் (Pentagon Force Protection Agency) ட்வீட் செய்துள்ளது.  பென்டகன் பாதுகாப்பு படை முகமை மெட்ரோ ரயில் நுழைவாயில் மற்றும் பேருந்து நடைபாதை பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சம்பவம் நடந்த இடம் பாதுகாப்பாக இருப்பதாகவும், மெட்ரோ ரயில் நுழைவாயில் மற்றும் பேருந்து நடைபாதை பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பென்டகனில் போக்குவரத்து பென்டகன் நகரத்திற்கு திருப்பி விடப்படுகிறது என்று மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் பென்டகன் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அதிமுக வெளிநடப்பு.. சிங்கிளாக பேட்ஜை கழற்றிவைத்துவிட்டு பேசிய செங்கோட்டையன்.!

அதிமுக வெளிநடப்பு.. சிங்கிளாக பேட்ஜை கழற்றிவைத்துவிட்டு பேசிய செங்கோட்டையன்.!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

17 minutes ago

தமிழ்நாடு பாஜக ‘புதிய’ தலைவர் யார்? பிரதமர் அருகில் கடைசி நேர இருக்கை ஒதுக்கீடு?

சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…

25 minutes ago

மசூதியின் மீது ஏறி காவிக் கொடி கட்ட முயன்ற இந்துத்துவா அமைப்பினர்! உ.பி.யில் பரபரப்பு சம்பவம்.!

உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…

48 minutes ago

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

1 hour ago

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

3 hours ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

3 hours ago