தேர்வெழுத வந்த சாய்பல்லவியை சூழ்ந்த மாணவர்கள்.! செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி.!

Published by
Ragi

திருச்சியில் தேர்வு எழுத வந்த சாய்பல்லவியுடன் சக மாணவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய்பல்லவி கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது நாக சைதன்யாவிற்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்னும் படத்திலும், ராணா நடிக்கும் விராட பர்வம் படத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார். மேலும் நானியுடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் இவர் திருச்சியில் உள்ள சிறுகனூர் எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் எப்எம்ஜிஇ(FMGE-Foreign Medical Graduate Examination) தேர்வை எழுதியுள்ளார். முககவசம் அணிந்து கொண்டு தலையில் முக்காடு போட்டு கொண்ட தேர்வு எழுதிய அவரை சக மாணவர்களால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் சில நேரங்கள் கழித்து தேர்வறையில் உள்ள மாணவர்கள் அவரை அடையாளம் கண்டுள்ளனர். அதனையடுத்து தேர்வு முடிந்த பின் சக மாணவர்கள் அனைவரும் சாய்பல்லவியுடன் இணைந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். பிரபல நடிகையாக உள்ள சாய்பல்லவி சக மாணவர்கள் செல்ஃபி எடுக்க கேட்ட போது உடனே ஒத்துக் கொண்டதுடன் தனது முககவசசத்தையும் மாற்றி எளிமையுடன் நடந்து கொண்டதாக சக மாணவர்கள் புகழ்ந்துள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago