பாரத பிரதமர் நரேந்திர மோடியை பற்றி ஆய்வு மேற்கொண்ட மாணவன்….!!!

Default Image
  • பாரத பிரதமர் நரேந்திர மோடியை பற்றி ஆய்வு மேற்கொண்ட மாணவன் மெகுல் சோக்சி.

மாணவர் மெகுல் சோக்சி என்பவர் சூரத்தை சேர்ந்தவர். வீர் நர்மத் சவுத் குஜராத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை துவங்கியுள்ளார். இவர் நரேந்திர மோடியின் தலைமைத்துவ பண்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இவர் தனது ஆய்வுக்காக அரசு அதிகாரிகள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என 450 பேரை சந்தித்து, நரேந்திர மோடி குறித்து சில கேள்விகளை கேட்டு, தெரிந்துகொண்டனர்.

இவர் மக்களிடம் மோடியை குறித்து, 32-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு, அவர்கள் கூறிய பதிலைகளை வீர் நர்மத் சவுத் குஜராத் பல்கலைக்கழகத்தில் கட்டுரையாக வடிவமைத்து சமர்ப்பித்துள்ளார்.

இந்த கட்டுரையில், 25% மக்கள் மோடி சிறந்த பேச்சாளர் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். 48% பேர் மோடியின் அரசியலை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மோடியின் அரசியலுக்கு ஆதரவாக 51% பேரும், அவருடைய உரை தங்களை கவரந்ததாக 34.25% பேரும் கருத்து தெரிவித்திருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்