ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட மாணவி! திடீரென கணினியை நோக்கி பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்!

Default Image

திடீரென கணினியை நோக்கி பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்.

அமெரிக்காவில் இண்டியன்டவுன் பகுதியில், 10 வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியின் வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நிகழ போவதை உணர்ந்த ஆசிரியர், அவரது வீடியோவை மட்டும் மியூட் செய்துள்ளார்.

அதன் பின் தான் சிறுமியின் தாயாருக்கும், அவரது முன்னாள் காதலருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அவரது முன்னாள் காதலர், சிறுமியின் தாயாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த சிறுமி ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்திய கணினியின் இது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமியின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், இவரின் முன்னாள் காதலரான வில்லியம்சை போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்