மாஸ்டர் படப்பிடிப்பு நடக்கும் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினருடன் தமிழக போலீசாரும் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் காட்சிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தில் கடந்த 1-ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்திலிருந்து இருந்து விஜய்யை வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை விசாரணை சுமார் 20 மணி நேரம் நடத்தப்பட்டு நேற்று முன் தினம் நிறைவடைந்தது.
ஐயத்தைத்தொடர்ந்து வருமான வரித்துறை விசாரணை முடிந்து நேற்று மீண்டும் நடிகர் விஜய் நெய்வேலியில் உள்ள படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், 10 பேர் கொண்ட பாஜகவினர் என்எல்சி 2-வது சுரங்கத்தின் முன் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு நடிகர் விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தை கட்டுப்படுத்த லேசான தடியடி வரை நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை வழக்கம் போல் நடிகர் விஜய் நெய்வேலியில் உள்ள படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினருடன் தமிழக போலீசாரும் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…