சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் பெரிய திரை சினிமாவுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் வரும் ஜூன் 19 முதல் நிறுத்தி வைக்கக்க ஃபெப்ஸி அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், அந்த நான்கு மாவட்டங்களில் தற்போது மீண்டும் பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே தடைபட்டு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் பெரிய திரை சினிமாவுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் வரும் ஜூன் 19 முதல் நிறுத்தி வைக்கக்க ஃபெப்ஸி அறிவித்துள்ளது. இதனை ஃபெப்சி நிறுவன தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பொது முடக்கத்தை மீண்டும் அறிவித்துள்ளதால் தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய மூன்று மாத பொதுமுடக்கத்திற்கு பிறகு மீண்டும் சீரியல் பார்க்க எண்ணிய சின்னத்திரை ரசிகர்கள் தற்போது மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…