அமெரிக்காவின் மினசோட்டாவின் செயின்ட் பால் நகரில் உள்ள ஒரு ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடையில் ஜூலை 1 -ம் தேதி ஓரு முஸ்லிம் பெண் ஆர்டர் செய்த காபியில் தனது பெயருக்குப் பதிலாக ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என எழுதப்பட்டதை பார்த்து அப்பெண் அதிர்ச்சி அடைத்தார்.
சம்பவம் நடந்த நாளில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக முகமூடி அணிந்திருந்த ஆயிஷா, காபி ஒன்றை ஆர்டரை செய்யும் போது தனது பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறினார். ஸ்டார்பக்ஸ் ஊழியர் தன் பெயரைக் கேட்டபோது, நான் மெதுவாக என்பெயரை பல முறை திரும்பத் திரும்பச் சொன்னேன். அதனால் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று ஆயிஷா கூறினார்.
நான் ஆர்டர் செய்த காபியை பார்த்தபோது நான் அதில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என எழுதப்பட்டதை பார்த்து இழிவுபடுத்தப்பட்டேன், மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். இது உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் நற்பெயரை சிதைக்கும் ஒரு சொல் என ஆயிஷா கூறினார். பின்னர், ஆயிஷா மேலாளரைக்இது குறித்து கேட்டார், அதற்கு அவர் இந்த சம்பவம் தவறாக நடந்துவிட்டது என கூறினர். நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்தோம், இது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல, ஆனால் ஒரு துரதிர்ஷ்டவசமான தவறு, மேலும், இது போன்று மீண்டும் ஏற்படாது. நாங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கிறோம் என அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஆயிஷாவிற்கு ஒரு புதிய காபி கொடுப்பட்டது. மேலும், 25 அமெரிக்க டாலர் பரிசு அட்டையும் ஸ்டார்பக்ஸ் வழங்கியது.
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…