” ராகுல் கண்ணில் வெண்ணெய் வைத்த ஸ்டாலின்…அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்…!!

Default Image

இன்று சென்னையில் திமுக நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல் காந்தி_யை பிரதமராக முன்மொழிந்தது குறித்தும் , நேற்று மேற்கு வங்க மாநிலத்தில் பேசும் போது ராகுல் காந்தியை பற்றி பேசாதது குறித்து விளக்கம் அளித்தார்.இவரின் இந்த விளக்கத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளரிடம் இதுகுறித்து பேசும் போது , சென்னை சிலை திறப்பு விழாவில்  ராகுல் காந்தி கண்ணில் வெண்ணையை வச்ச ஸ்டாலின் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா கண்ணில் சுண்ணாம்பை வைத்து விட்டார். பிரதமர் வேட்பாளர் குறித்து தெளிவான கருத்து ஸ்டாலினிடம் இல்லை. முன்னுக்கு பின் முரணாக பேசிவரும் முக ஸ்டாலின் முரண்பாட்டின் மொத்த உருவம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.முக.ஸ்டாலினுக்கு எப்படி கட்சி நடத்த வேண்டுமென்று தெரியவில்லை . திசை தெரியாத காட்டில் உலாவுவது போல முக.ஸ்டாலின் செல்கிறார் என்று ஸ்டாலின் அளித்த விளக்கத்தை விமர்சனம் செய்து அமைச்சர் பேசினார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்