தேனி காட்டுத் தீயில் சிக்கியவர்களுக்கு உயர்தர சிகிச்சை?
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியவர்களுக்கு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குரங்கணி காட்டுப் பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படும் நிலையில் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உரிய வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தால், விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தவிர்த்திருக்க முடியும் என்று கூறியுள்ள அவர், இனி வரும் காலங்களில் மலையேற்றத்திற்கு செல்வோரின் பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.