இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கை மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சை அடைந்து வருகின்றனர்.அவ்வப்போது,கடல் வழியாக பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சிலர் கைதும் செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில்,இலங்கை மக்கள் தினமும் இரு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக,இலங்கை கல்லூரியில் நிகழ்வில் பேசிய பிரதமர் ரணில் கூறுகையில்:”இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியின் தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே,இனிதான் மிக மோசமான விஷயங்கள் நிகழப்போகிறது இதனால்,மக்கள் தினமும் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும்.
இதன்காரணமாக,இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய,சில பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. இதனால்,நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மாறாக நிதியுதவி கிடைக்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
இதனிடையே,போதியளவு உரங்கள் இல்லாததால் செப்டம்பர்,அக்டோபர் வரை மட்டுமே நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும்.ஆனால்,நமது நாட்டிற்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது.ஏனைய நாடுகளும் உதவுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…