#BigBreaking:பரபரப்பு…மாளிகைக்குள் போராட்டக்காரர்கள்;தப்பியோடிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே?..!

Default Image

போராட்டக்காரர்கள் குவிந்ததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே மாளிகையில் இருந்து தப்பியோடியுள்ளார் என்று தகவல்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.குறிப்பாக,நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணாததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,ஆளும் அரசிற்கு எதிராக எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால்,போராட்டத்தைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகை முன்பு போராட்டக்காரர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் குவிந்துள்ளனர்.கூட்டத்தை கலைக்க இலங்கை காவல்துறை தண்ணீர் பாய்ச்சியும்,கண்ணீர் புகைக்குண்டு வீசியும் வருகின்றனர்.எனினும்,போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் உள்நுழைந்துள்ளதாகவும்,இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடி ராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உளவுத்துறை எச்சரித்ததையடுத்து இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே,நேற்று இரவே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்