இலங்கை அதிபரை கொலை செய்ய உளவு அமைப்பு முயற்சி …!இலங்கை அரசு மறுப்பு…!

Default Image

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய  இந்தியாவின் உளவு அமைப்பு (RAW)  முயற்சி என்று வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.
அடுத்த வாரம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர இருக்கிறார். இந்நிலையில் கொழும்புவில் நேற்று அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தன்னைக் கொல்ல இந்தியாவின் உளவு அமைப்பு (RAW) சதிசெய்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.ஆனால் இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாது என்றும் இலங்கை அதிபர் சிறிசேனா கூறினார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் அந்த தகவலை இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக  இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய இந்தியாவின் உளவு அமைப்பு (RAW) முயற்சி என்று வெளியான தகவல் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்