இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம் – பலி எண்ணிக்கை 290-ஆக உயர்வு

இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு

இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது.

முதலில் 6 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இதனை தொடர்ந்து மேலும் சில இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது. நேற்று இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 பேர் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிகமான வெளிநாட்டவர்களும் பலியாகியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தற்போது 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம் – பலி எண்ணிக்கை 290-ஆக உயர்வு