இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம்! 3 குழந்தைகளை இழந்த டென்மார்க்கின் நம்பர் 1 பணக்காரர்!

Published by
லீனா

இலங்கையின் தலைநகரான கொழும்பில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பில், 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆண்டர்சன் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன் என்பவர் டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் ஆவார்.  சுமார் 50 ஆயிரம் கோடிக்கு சொந்தகாரரான இவர், ஈஸ்டர் பண்டிகைக்காக இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில், ஆன்ட்ரஸனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளதாக, அவரது நிறுவன செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

மேலும், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் சலீமின் மகள், மருமகன் மற்றும் இரு பேரன்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், ஷேக் சலீமின் மருமகன் மொஷியுல் ஹக் சவுத்ரி படுகாயம் அடைந்தார். இரு பேரன்களில் ஜயான் சவுத்ரி என்பவர் காணவில்லை என கூறப்பட்ட நிலையில், அச்சிறுவன் தாக்குதலில் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொஷியுல் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பலியான சிறுவன் ஜயானின் உடல் கொழும்புவிலிருந்து வங்கதேசம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

3 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

3 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

3 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

3 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

4 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

4 hours ago