முடங்கிய சமூக ஊடக தளங்கள் – இலங்கை அரசு அதிரடி!

Published by
Edison

இலங்கை:அதிபர் ராஜபக்சே அரசுக்கு எதிராக குடிமக்கள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்த திட்டமிட்ட நிலையில்,வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.குறிப்பாக,13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது.

36 மணி நேர முழு ஊரடங்கு:

இதன்காரணமாக,இலங்கையில் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.எனினும்,இன்று மாபெரும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில்,இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 36 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முடங்கிய சமூக ஊடகங்கள்:

இந்நிலையில்,இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும்,பொருளாதார நெருக்கடி தொடர்பாக மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவதற்கு குடிமக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து,இலங்கை அரசு சமூக ஊடக தளங்களை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம்:

36 மணி நேர ஊரடங்குச் சட்டத்தின் போது அனுமதியின்றி யாரும் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்ததையடுத்து,தற்போது இலங்கை அரசு சமூக ஊடக தளங்களை முடக்கியுள்ளது.

நிகழ்நேர நெட்வொர்க் தரவு:

இதனால்,Twitter, Facebook, WhatsApp, YouTube, Instagram உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கான அணுகலை தடைசெய்து,நாடு தழுவிய சமூக ஊடக முடக்கத்தை இலங்கை அரசு விதித்துள்ளதாக நிகழ்நேர நெட்வொர்க் தரவு காட்டுகிறது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago