முடங்கிய சமூக ஊடக தளங்கள் – இலங்கை அரசு அதிரடி!

Published by
Edison

இலங்கை:அதிபர் ராஜபக்சே அரசுக்கு எதிராக குடிமக்கள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்த திட்டமிட்ட நிலையில்,வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.குறிப்பாக,13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது.

36 மணி நேர முழு ஊரடங்கு:

இதன்காரணமாக,இலங்கையில் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.எனினும்,இன்று மாபெரும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில்,இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 36 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முடங்கிய சமூக ஊடகங்கள்:

இந்நிலையில்,இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும்,பொருளாதார நெருக்கடி தொடர்பாக மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவதற்கு குடிமக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து,இலங்கை அரசு சமூக ஊடக தளங்களை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம்:

36 மணி நேர ஊரடங்குச் சட்டத்தின் போது அனுமதியின்றி யாரும் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்ததையடுத்து,தற்போது இலங்கை அரசு சமூக ஊடக தளங்களை முடக்கியுள்ளது.

நிகழ்நேர நெட்வொர்க் தரவு:

இதனால்,Twitter, Facebook, WhatsApp, YouTube, Instagram உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கான அணுகலை தடைசெய்து,நாடு தழுவிய சமூக ஊடக முடக்கத்தை இலங்கை அரசு விதித்துள்ளதாக நிகழ்நேர நெட்வொர்க் தரவு காட்டுகிறது.

Recent Posts

LIVE : அண்ணா நினைவு நாள் நிகழ்வுகள் முதல்.., இறுதிக்கட்ட பிரச்சார நிகழ்வுகள் வரை.., 

LIVE : அண்ணா நினைவு நாள் நிகழ்வுகள் முதல்.., இறுதிக்கட்ட பிரச்சார நிகழ்வுகள் வரை..,

சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

23 minutes ago

குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை வென்றார் பிரக்ஞானந்தா.!

நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…

42 minutes ago

இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல்.!

மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…

2 hours ago

மீண்டும்.. மீண்டுமா? தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…

3 hours ago

ஈரோடு: இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பரப்புரை!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…

3 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…

16 hours ago