தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என அறிவிக்கப்பட்டு, பின்னர் படக்குழுவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சிறப்பு காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அதிக டிக்கெட் விலை, ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு 2,3 காட்சிகளை திரையிடுகிறார்கள்” என்ற தொடர் குற்றச்சாட்டுகளால்தான் தீபாவளிக்கு சிறப்புக்காட்சிக்கு அனுமதி இல்லையென கூறினோம். பின் பொதுமக்கள், ரசிகர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு காட்சிக்கு மட்டும் ஒரு நாள் அனுமதி அளித்தோம். ‘ என கூறியிருந்தார்.
மேலும், ‘ இனிமேல் சிறப்புக்காட்சிகளுக்கு அரசே ஒரு கட்டணத்தை நிர்ணயித்து, அது வெளிப்படையாக மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டு அந்த கட்டணத்தை தான் வாங்க வேண்டுமென கூறியிருக்கின்றோம்.’ எனவும் பதிவிட்டுள்ளார்.
இதனால், இனி சிறப்பு காட்சிகளுக்கும் அரசே கட்டத்தை நிர்ணயம் செய்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…