சில தினங்களுக்கு முன் இருந்ததை விட எஸ்.பி.பி. சுவாசிப்பதில் சிரமம் குறைந்துள்ளதாக மகன் சரண் தெரிவிப்பு.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறியிருந்த நிலையில் இதையடுத்து, கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர கவனித்து வருகின்றனர். உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில், எனது தந்தை எஸ்.பி.பி. மெல்ல மெல்ல தேறி வருகிறதாகவும், முன்பு விட தற்போது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்தார்.
இதற்கிடையில் இன்று மகன் சரண் பேசிய ஒரு வீடியோ ஒன்று வெளியகியுள்ளது. அதில் அவர் பேசுகையில், அப்பா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு இருந்ததை விட எஸ்.பி.பி. சுவாசிப்பதில் சிரமம் குறைந்துள்ளது, கண் விழித்து மருத்துவரிடம் கை சைகை செய்தார் என கூறினார். மேலும் அவர் கூறுகையில், அம்மாவும் குணமாகி வருகிறார்கள் ஓரிரு நாட்களில் நலம் பெறுவார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…