சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளை குறிவைத்து தாக்கியுள்ள கொரோனா வைரஸ் நோயானது, தென்கொரியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்நிலையில் அந்த நாட்டு அரசு மேற்கொள்ளும் தீவிர நடவடிக்கை காரணமாக தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நூற்றுக்கும் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களால் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 508 பேர் பாதிக்கப்பட்டதாக தென் கொரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தற்போது வரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 92 சதவீதம் பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், எஞ்சிய எட்டு சதவீதம் பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 1988ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்காக சியோலில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை கொரோனா நோய் தடுப்புக்கான தற்காலிக பரிசோதனை மையமாக தென்கொரிய அரசு மாற்றியுள்ளது. சர்வதேச நாடுகளிலிருந்து திரும்புபவர்கள் ஆயிரம் பேருக்கு தினசரி அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகின்றன.
கடந்த மாதம் வரை அறிகுறி இருப்பவர்கள் மட்டுமே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி தென் கொரிய அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் தற்போது நோய்த்தொற்று அதிகரித்து அதன் காரணமாக விமான நிலையத்தில் வந்திறங்கும் அனைவருக்கும் இந்த பரிசோதனையை செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…
திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…
கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…
சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…