ஒரே நேரத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கூறிய தென் ஆப்பிரிக்க பெண் கைது!

Published by
Rebekal

ஒரே நேரத்தில் பத்து குழந்தைகளை பெற்றெடுத்ததாகக் கூறிய தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயதுடைய சிதோலே எனும் பெண்மணி ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக  கூறப்பட்டது. இதில் ஏழு ஆண் குழந்தை மூன்று பெண் குழந்தை எனவும் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் எனவும் கூறப்பட்டது. மேலும் இது உலக சாதனையாக கருதப்பட்டதுடன், உலகம் முழுவதும் பல இடங்களில் இது குறித்த செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதனை அடுத்து அந்தப் பெண்மணியின் தோழி தனது தோழிக்கு ஏழு சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் பிரிட்டோரியா மருத்துவமனையில் பிறந்துள்ளதாகவும், தான் தற்பொழுது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பிரிட்டோரியா மருத்துவமனையில் விசாரித்த பொழுது நாங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பல இடங்களில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 10 குழந்தைகள் பிறந்தது என்பது விளம்பரத்திற்காகவும் நன்கொடை பெறுவதற்காகவும் கூறப்பட்டது எனது தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிதோலே கடந்த ஜூன் 17 ஆம் தேதி அதிகாலை ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள ராபி ரிட்ஜின் வடக்கு நகரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிதோலே என்னும் இந்தப் பெண் 10 குழந்தைகள் பெற்று எடுக்கவில்லை எனவும், தென் ஆப்பிரிக்க தேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னாப்பிரிக்காவின தேசிய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதோலே என்னும் இந்தப் பெண்மணிக்கு 10 குழந்தைகள் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பெண்மணியின் வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில், சிதோலே தனது விருப்பத்திற்கு எதிராக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிப்பதற்கு நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது அவர் மனநிலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் கைவிலங்குடன் உள்ளதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நான்காவது டி20 யில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா தொடரை கைப்பற்றியது !

நான்காவது டி20 யில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா தொடரை கைப்பற்றியது !

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…

7 hours ago

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா – விசிக தலைவர் திருமா ‘திடீர்’ சந்திப்பு!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…

9 hours ago

பாண்டியா – சிவம் துபே ருத்ர தாண்டவம்! சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி! 182 ரன்கள் இலக்கு!

புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…

9 hours ago

தடுமாறும் இந்திய அணி வீரர்கள்.., 4வது டி20யில் மளமளவென சரியும் விக்கெட்டுகள்!

புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…

10 hours ago

களத்திற்கு செல்ல தயங்க கூடாது! தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்!

சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…

10 hours ago

நெருங்கும் டெல்லி தேர்தல்., 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ‘திடீர்’ ராஜினாமா!

டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல்…

12 hours ago