சூரரை போற்று திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று சூர்யா கூறியுள்ளார்.
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசரும், டிரைலரும் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இவரது மனைவி நடித்த பொன்மகள் வந்தாள் படத்தினை ஓடிடியில் வெளியிட தீர்மானித்தை அடுத்து இவரது ஒரு படமும் இனி முதல் திரையரங்குகளில் வெளியிட முடியாது என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டித்தனர். அதனையடுத்து சூரரை போற்று படமும் ஓடிடியில் தான் வெளியிடுவார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் இடையில் எழுந்தது. இந்த நிலையில் தற்போது சூரரை போற்று படம் திரையரங்குகளில் வெளியிடபடுமா என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு, தனது மனதுக்கு பிடித்த படங்களில் ஒன்று சூரரை போற்று என்று கூறியுள்ளார். மேலும் திரையரங்குகளில் படத்தை பார்க்கும் அனுபவத்தை போன்று வேறு எதிலும் கிடைக்காது என்றும், கூறிய சூர்யா சூரரை போற்று படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் முதலில் வெளியிடப்படும், அதன் பின்னரே ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டதால் தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…