22 பேர் உயிரைக் காப்பாற்றிய நடிகர் சோனு சூட்..!!

Published by
பால முருகன்

சோனுசூட்டும் அவரது அணி உறுப்பினர்களும் 15 சிலிண்டர்களை பெங்களூர் மருத்துவமனைக்கு ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தனர். இதன் மூலம் 22 கொரோனா நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்தார். அதுமட்டுமல்லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பல உதவிகளை செய்தார்.

கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் விழுப்புணர்வுடன் இருக்க அரசு கேட்டு கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பெங்களூரு உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டு பல தரப்பில் கேட்டனர், ஆனால் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சத்யநாராயணன் என்பவர் , தனக்கு தெரிந்த நடிகர் சோனு சூட்டின் அறக்கட்டளை உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். உடனடியாக சோனு சூட்டும் தனக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் தகவலை தெரிவித்து ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்து முதலில் ஒரு சிலிண்டர் ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதன் பின்  சோனுசூட்டும் அவரது அணி உறுப்பினர்களும் சில மணி நேரத்தில் மேலும் 15 சிலிண்டர்களை மருத்துவமனைக்கு ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தனர். இதன் மூலம் 22 கொரோனா நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. சோனு சூட் செய்த இந்த உதவிக்காக பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Published by
பால முருகன்
Tags: Sonu Sood

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

6 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

7 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

7 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

8 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

8 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

9 hours ago