பக்கவாதத்தால் பாதிக்கபட்ட தாயை உயிருடன் புதைத்த மகன்! மூன்று நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு!

Published by
லீனா

பக்கவாதத்தால் பாதிக்கபட்ட தாயை உயிருடன் புதைத்த மகன். மூன்று நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு. 

சீனாவில் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜிங்பியான் நகரைச் சேர்ந்தவர் வாங் என்ற 79 வயது மூதாட்டி. இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது மகன் மா (58) தான் இவரை பராமரித்து வந்துள்ளார். 

இந்நிலையில், மா கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தனது தாயை, நாற்காலியில் அமரவைத்து வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளார். அதன்பின் மா மட்டும் தனியாக வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து மாவின் மனைவியான ஜாங் தனது கணவரிடம் கேட்ட போது, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதனையடுத்து, 3 நாட்கள் கடந்து மாமியார் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ஜாங், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மாவை விசாரித்த போது, அவர் தனது தாயை உயிருடன் புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வாங் புதைக்கப்பட்ட இடத்திற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். 

அப்போது அங்கு சரிவர மூடப்படாத குழியில் இருந்து, ஒரு  பெண்ணின்  முனங்கல் சத்தம் கேட்டதை தொடர்ந்து, போலீசார் அந்த இடத்தை தோண்டியபோது, குழிக்குள் வாங் உயிருடன் இருந்துள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து, மா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது  செய்துள்ளனர். 

Published by
லீனா

Recent Posts

SAvAFG : இறுதி வரை போராடிய ரஹ்மத் ஷா! வெற்றியை தட்டி தூக்கிய தென் ஆப்பிரிக்கா! 

SAvAFG : இறுதி வரை போராடிய ரஹ்மத் ஷா! வெற்றியை தட்டி தூக்கிய தென் ஆப்பிரிக்கா!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின.  இந்தப் போட்டி…

2 hours ago

“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்

கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …

4 hours ago

“கடலூருக்கு அசத்தலான 10 முக்கிய அறிவிப்புகள்..,” லிஸ்ட் போட்ட முதலமைச்சர்!

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …

5 hours ago

“நல்ல கருத்து சொல்ற படம்” மீண்டும் இணையும் டிராகன் கூட்டணி! கண்கலங்கிய பிரதீப்.!

சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…

6 hours ago

SAvAFG : நிலைத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா! ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 316 டார்கெட்!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.  இந்தப் போட்டி…

6 hours ago

ஆதாரமற்ற குற்றச்சாட்டால் சொத்துக்கள் முடக்கம்: ‘மேல்முறையீடு செய்வேன்’ – ஷங்கர் முழக்கம்.!

சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…

7 hours ago