பக்கவாதத்தால் பாதிக்கபட்ட தாயை உயிருடன் புதைத்த மகன். மூன்று நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு.
சீனாவில் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜிங்பியான் நகரைச் சேர்ந்தவர் வாங் என்ற 79 வயது மூதாட்டி. இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது மகன் மா (58) தான் இவரை பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மா கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தனது தாயை, நாற்காலியில் அமரவைத்து வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளார். அதன்பின் மா மட்டும் தனியாக வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து மாவின் மனைவியான ஜாங் தனது கணவரிடம் கேட்ட போது, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனையடுத்து, 3 நாட்கள் கடந்து மாமியார் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ஜாங், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மாவை விசாரித்த போது, அவர் தனது தாயை உயிருடன் புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வாங் புதைக்கப்பட்ட இடத்திற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கு சரிவர மூடப்படாத குழியில் இருந்து, ஒரு பெண்ணின் முனங்கல் சத்தம் கேட்டதை தொடர்ந்து, போலீசார் அந்த இடத்தை தோண்டியபோது, குழிக்குள் வாங் உயிருடன் இருந்துள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து, மா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…