பிரியாணிக்கு ஈடான சுவை கொண்ட பீட்ரூட் சாதம் எப்படி செய்வது?

பீட்ரூட் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஆனால் இந்த பீட்ரூட் வைத்து பிரியாணிக்கு ஈடான சுவை கொண்ட சாதம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட்
- பிரியாணி இலை
- பட்டை
- மிளகு தூள்
- ஏலக்காய்
- இஞ்சி பூண்டு விழுது
- மஞ்சள் தூள்
- புதினா
- மிளகாய் தூள்
- வெங்காயம்
- அரிசி
- நெய்
- உப்பு
- எண்ணெய்
- பச்சை மிளகாய்
செய்முறை
முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். பின் மிளகாய் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட்டு மூடி வைக்கவும். அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து இவற்றுடன் புதினாவையும் சேர்த்து அதன் பின் துருவி வைத்துள்ள அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
லேசாக வதங்கியதும் ஊறவைத்து எடுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி, 3 விசில் வரும் வரை மூடிவைக்கவும். அதன் பின் லேசாக நெய் ஊற்றி இறக்கினால் அட்டகாசமான பீட்ரூட் சாதம் வீட்டிலேயே தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025