உலகையே பயமுறுத்த காத்திருக்கும் சூரிய புயல்…! நாளை பூமியை தாக்குகிறது ….!

Default Image

நாளை சூரிய புயல்  பூமியை தாக்கும் என்று  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில் ,இந்த சூரிய புயல் சூரியனில் ஏற்பட்டுள்ள சிறிய ஓட்டை காரணமாக உருவாகியுள்ளது.அதேபோல்  சூரிய புயலின் பாதையில் பூமி உள்ளது .இதனால் இந்த புயல் பூமியை நெருங்கும்பொழுது வானத்தில் நீல நிற கதிர்வீச்சுகள் தென்படும் .இதனால் செயற்கைக்கோள்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எப்பொழுதுதும் பூமிக்கு சூரிய புயலின் தாக்குதல்  இருந்துகொண்டிருக்கும். அதனை பூமியின் காந்தப்புலம் கட்டுப்படுத்திவிடும். ஆனால், இந்த புயலின் வேகம் சற்று அதிகமாக இருப்பதால், இதனால் செயற்கைக்கோள்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும்.இந்த புயலால் செயற்கைக்கோள்கள் பாதிப்படைவதால் செல்போன்களில் சிக்னல் பிரச்சனை மற்றும் ஜிபிஎஸ்  (GPS) பிரச்சனைகள் ஏற்படும்.

சூரிய புயலால் மனிதர்களுக்கு பெரிதளவில் இல்லை .இருந்தாலும்  புயலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அதிகமாக இருந்தால் கேன்சர் போன்ற நோய்கள் உண்டாகும். இதற்கு முன்பாக 1859ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதேபோன்று சூரிய புயலின் தாக்குதல் ஏற்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்