சொடக்கு தக்காளி பழத்தின் நன்மைகள்….!!!
சொடக்கு தக்காளி பழத்தை கிராம புறங்களில் அதிகமாக பார்க்கலாம். ஏனென்றால் இது காட்டு பகுதிகளில் மழை காலங்களில் அதிகமாக முளைத்து நிற்கும். நகர பகுதிகளில் உள்ளவர்கள் இதை பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பில்லை, இருந்தாலும் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.
சொடக்கு தக்காளி காய் குமிழ் போன்ற மேல் தோலுக்குள் இருக்கும். நன்கு முற்றிய பழத்தை சாப்பிட்டால் நுரையீரல் நோய்கள் நீங்கும். சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனைகள் சரியாகும். இந்த பழத்தில் இரும்புசத்து அதிகம் இருப்பதால் அனீமிசியா, சோர்வு, அறிவுத்திறன் குறைபாடுகள் சரியாகும். கட்டிகளை கரைக்கும் ஆற்றலும் இந்த பழத்துக்கு உண்டு.