அடடே இவ்வளவு நன்மைகளா…? செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்….!!!
செம்பருத்தி பூ நாம் நமது வீட்டில் அழகு செடியாக தான் வளர்க்கிறோம். சிலர் இந்த செடியின் பலன் தெரியாமலே வீட்டில் வளர்கின்றன. இந்த செடியில் நமது உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களை குணப்படுத்தகக்கூடிய ஆற்றல் உள்ளது. இது நமது உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் கொண்டுள்ளது.
பயன்கள் :
வாய்புண் :
அஜீரண கோளாறு மற்றும் பல கோளாறுகளால் வயிறு மற்றும் வாய்களில் புண் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து 5 அல்லது 10 பூக்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் விரைவாக குணமடையும்.
கூந்தல் வளர்ச்சி :
முடி உதிர்வு, முடி செந்நிறம் மாறுவதற்கு மற்றும் கூந்தல் வளர்ச்சியடைய செம்பருத்தி பூவின் காய்ந்த மொட்டுக்களை தேங்காய் எண்ணையில் போட்டு ஊற வைத்து, அந்த எண்ணையை தேய்த்து வந்த இந்த பிரச்சனைகள் முழுவதுமாக இல்லாமல் போய்விடும்.
கருப்பை கோளாறுகள் :
கருப்பையில் உள்ள கோளாறுகளை நீக்க, 10 செம்பருத்தி பூக்களை அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும்.
இரத்த அழுத்தம்:
இந்த பூவின் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
பொடுகு நீங்க :
செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொள்ளவ்ர்கள் நீங்கும்.