இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பார்ப்பது பலருக்கும் பிடித்தமான செயல்என சொல்லலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் பார்த்திராத அரிய வகை உயிரினங்களும் நம் கண்களை கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண மீன்களும் காணப்படும்.
இந்நிலையில், அதே நேரத்தில் ஆபத்துகளும் இருக்கும் என்பதையும் நாம் அறிய வேண்டும். பின்னர் கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பிட்ட பகுதியில் கடலின் தன்மை, புதை படிமங்கள் போன்றவற்றை கண்டறிய நீர் மூழ்கி வீரர்களும் கடலுக்குள் செல்வது வழக்கமானது ஆகும்.
அவ்வப்போது, பிரிட்டனின் நார்தம்பெர்லாண்ட் பகுதியை சேர்ந்த நீர்மூழ்கி வீரரான பென் பர்வில்லி என்பவர் அப்பகுதியில் உள்ள ஃபார்னி தீவில் ஆழ்கடல் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது வீரரின் அருகில் வந்த சீல் எனப்படும் கடல் நாய் ஒன்று அவரது கையை பிடித்தது. அதன் பின்னர் கடல் நாய் வீரரை தடவிக் கொடுக்க பதிலுக்கு வீரரும் அதன் உடலை தடவிக் கொடுத்தார். இறுதியாக வீரரை கட்டித் தழுவிய கடல் நாய் தனது அன்பை வெளிப்படுத்தியது.
பின்னர் அவருடன் சென்ற மற்றொரு நீர்மூழ்கி வீரர், இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…