இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பார்ப்பது பலருக்கும் பிடித்தமான செயல்என சொல்லலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் பார்த்திராத அரிய வகை உயிரினங்களும் நம் கண்களை கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண மீன்களும் காணப்படும்.
இந்நிலையில், அதே நேரத்தில் ஆபத்துகளும் இருக்கும் என்பதையும் நாம் அறிய வேண்டும். பின்னர் கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பிட்ட பகுதியில் கடலின் தன்மை, புதை படிமங்கள் போன்றவற்றை கண்டறிய நீர் மூழ்கி வீரர்களும் கடலுக்குள் செல்வது வழக்கமானது ஆகும்.
அவ்வப்போது, பிரிட்டனின் நார்தம்பெர்லாண்ட் பகுதியை சேர்ந்த நீர்மூழ்கி வீரரான பென் பர்வில்லி என்பவர் அப்பகுதியில் உள்ள ஃபார்னி தீவில் ஆழ்கடல் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது வீரரின் அருகில் வந்த சீல் எனப்படும் கடல் நாய் ஒன்று அவரது கையை பிடித்தது. அதன் பின்னர் கடல் நாய் வீரரை தடவிக் கொடுக்க பதிலுக்கு வீரரும் அதன் உடலை தடவிக் கொடுத்தார். இறுதியாக வீரரை கட்டித் தழுவிய கடல் நாய் தனது அன்பை வெளிப்படுத்தியது.
பின்னர் அவருடன் சென்ற மற்றொரு நீர்மூழ்கி வீரர், இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…