எச்சரிக்கை..! புகைப் பிடிப்பவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்பும்;கொரோனாவால் மரணம் ஏற்படவும் 50 % வாய்ப்பு – WHO ..!

Published by
Edison

புகைபிடிப்பவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்பு மற்றும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு ஏற்பட 50 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

புகைப்பிடிப்பவர்கள் சார்ஸ் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.ஏனெனில் புகைபிடிப்பதால், வைரஸானது கையிலிருந்து வாய்க்கு பரவி,அதன் மூலமாக மனித நுரையீரலை பாதிக்கிறது,எனவே,இதுபோன்ற எந்தவொரு புகையிலை தயாரிப்புகளையும் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

அந்த வகையில்,உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் மற்றும் தலைமை மருத்துவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், புகைப்பிடிப்பவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்புகள் மற்றும் கொரோனா காரணமாக இறப்பதற்கு 50 சதவீதம் வரை அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.

மேலும்,WHO இன் ‘கமிட் டு க்விட்’ என்ற புகையிலைக்கு எதிரான பிரச்சாரம் குறித்த அறிக்கையில்,டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது, “புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று எளிதில் பரவும். அதுமட்டுமல்லாமல்,புற்றுநோய்,இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

அதனால்,உயிரிழப்பு ஏற்பட 50 சதவீதம் வரை அதிக வாய்ப்பு உள்ளது.எனவே,புகைபிடிப்பவர்கள் இந்த கொடிய கொரோனா வைரஸிலிருந்து தங்களுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள நினைத்தால் புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.

மேலும்,உலக சுகாதார அமைப்பின் பிரச்சாரத்தில் சேர்ந்து,புகையிலை இல்லாத சூழல்களை உருவாக்குவதற்கு,அனைத்து நாடுகளும் தங்களது பங்களிப்பை அளியுங்கள்”,என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து,புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக,’க்விட் சேலஞ்ச்’ என்ற முறையில், வாட்ஸ்-அப், வைபர்,பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் வி-சாட் ஆகியவற்றின் மூலமாக ஆறு மாதங்களுக்கு அதற்கான உதவிக்குறிப்புகளை WHO வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

12 mins ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

30 mins ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

30 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

42 mins ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

15 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

23 hours ago