கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பாகிஸ்தானின் 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பிரதமர் இம்ரான் கான் விதித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வருவதை அடுத்து உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 9 அன்று பாகிஸ்தானில் உள்ள 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசாங்கம் விதித்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று, கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் இம்ரான் கான், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க ஸ்மார்ட் லாக்டவுன் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் மருத்துவமனைகளின் அதிகப்படியான சுமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக சுகாதார அமைப்பு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் சுகாதார அமைப்பு அதிகாரிகளுக்கு இம்ரான் கான் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனையில் 1500 படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் நோயாளிகளின் வசதிக்காக 1000படுக்கைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 237,489 ஆக உயர்ந்துள்ளதாகவும், 4,922 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும், அதே நேரத்தில் 140,965 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…